இடுகையிட்டது கீரா | 2:57 AM | 5 கருத்துரைகள் »

காலம் என்னை கழுவிலேற்றி வைத்திருக்கிறது ..துங்கா இரவுகள் எப்போதும் என்னிடம் மிச்சமிருக்கின்றன..என் வனமெங்கும் தேவதைகள் நிரம்பியிருந்தாலும் வெறுமையின் உச்சத்திலேயே ஒவ்வொரு கணமும் நதியில் அடங்காத நீராக வாழ்வின் பெரும் சுழியாகி நிற்கிறது...ஒரு இனத்தின் அவலம் கண்முன்னே நிகழ்ந்தும் கவிதை எழுதும் அடைப்பிற்குள் சுருங்கி போன கேவலம் மனதின் அடியாழத்தை நொறுக்கி கொண்டிருக்கிறது....

5 கருத்துரைகள்

  1. PRINCENRSAMA // August 5, 2010 at 10:24 AM  

    //ஒரு இனத்தின் அவலம் கண்முன்னே நிகழ்ந்தும் கவிதை எழுதும் அடைப்பிற்குள் சுருங்கி போன கேவலம் மனதின் அடியாழத்தை நொறுக்கி கொண்டிருக்கிறது...//

    :(

  2. prabalini prabakaran // August 5, 2010 at 12:09 PM  

    ஒரு இனத்தின் அவலம் கண்முன்னே நிகழ்ந்தும் கவிதை எழுதும் அடைப்பிற்குள் சுருங்கி போன கேவலம் மனதின் அடியாழத்தை நொறுக்கி கொண்டிருக்கிறது...

    அருமையான வரிகள்...
    எத்தனையோ தமிழரின் மனதில் உள்ள சிந்தனை இது ... எவரும் சொல்ல மாட்டார்கள்...
    எத்தனை பாடல் எழுதினால் என்ன? எத்தனை கவிதை எழுதினால் என்ன?
    அத்தனை உயிரும் திரும்பி வந்து விடுமா?
    எங்கள் மனதில் உள்ள பாரத்தை குறைக்க மட்டுமே உதவும். அதிலும் சுயநலம்....
    நீங்கள் எழுதும் பொழுது இந்திய தமிழர் இலங்கை தமிழர் என்ற வேற்றுமை மறைகின்றது. உங்கள் அடி மனதில் இருந்து உண்மையை எழுதுவதால் சகோதரா. அருமையான வரிகள்...

  3. Unknown // August 31, 2010 at 12:09 AM  

    அருமையான வரிகள்...

  4. Unknown // August 31, 2010 at 9:42 PM  

    puriala

  5. திவ்யா மாரிசெல்வராஜ் // September 26, 2010 at 2:23 AM  

    கவலை வேண்டாம் அண்ணா. நிச்சயம் நமது நம்பிக்கை வீணாகாது. காத்திருப்போம்

Post a Comment